தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காசியை போல் தமிழகத்தில் ராமேஸ்வரத்தில் தமிழ் சங்கமம் நடத்த பிரதமருக்கு பரிந்துரை: ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி

Advertisement

வாரணாசி: வாரணாசியில் நடைபெற்று வரும் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் கலந்து கொண்டார். அவருடன் 45 நாடுகளுக்கும் மேற்பட்ட தூதரக அதிகாரிகள் வந்திருந்தனர். வாரணாசி இந்து பல்கலையில் உள்ள பண்டிட் ஓம்கார்நாத் தாகூர் ஆடிட்டோரியத்தில், தூதரக அதிகாரிகள் உடனான கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. இதில் வாரணாசி பல்கலைக்கழக துணைவேந்தர் சஞ்சய் குமார் கலந்து கொண்டார். கலந்துரையாடல் நிகழ்வில் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது: மிகப் பழமையான நகரான காசிக்கு நாடு முழுவதும் கலாச்சார ஈர்ப்பு உள்ளது.

இதுபோல் தமிழகத்துக்கு காசியுடன் கலாச்சார ஈர்ப்பும் உறவும் உள்ளது. இதனால் தான் காசியில் தமிழ் சங்கமம் நடத்த பிரதமர் முடிவு செய்தார் என்றார். நிகழ்ச்சியில் பங்கேற்ற பூடான், கொலம்பியா, ஈராக், ஜமைக்கா, உகாண்டா உள்ளிட்ட நாடுகளின் தூதரக அதிகாரிகள் தமிழ்ச் சங்கமம் மற்றும் இந்தியாவின் பன்முகத்தன்மை, வேற்றுமையில் ஒற்றுமை குறித்து தங்கள் கருத்துகளையும் வியப்பையும் வெளிப்படுத்தினர். தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுவது போல், ராமேஸ்வரத்தில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுமா என்று கேட்டதற்கு ஜெய்சங்கர் இதுகுறித்து பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று பதிலளித்தார்.

Advertisement

Related News