Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

கர்நாடக அரசியல்வாதிகள் போல் தமிழகத்திலும் ஒன்றிணைய வேண்டும்: மாணிக்கம் தாகூர் பேட்டி

சென்னை: கர்நாடக அரசியல்வாதிகள் போல், தமிழகத்திலும் ஒன்றிணைய வேண்டும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாக்கூர் தெரிவித்தார். தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள மாணிக்கம் தாக்கூர், நேற்று ஸ்ரீபெரும்புதூரில் உள்ள மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

முன்னாள் பாரத பிரதமர் கண்ட கனவுகளை நிறைவேற்றும் விதத்தில், தற்போது தமிழக அரசின் கூட்டணியில் இணைந்து காங்கிரஸ் பணியாற்றி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. மேகதாது அணை விவகாரத்தில் அங்கு ஒரு செங்கலை கூட கட்ட விடமாட்டோம். இதற்காக சட்டமன்றத்தில் தீர்மானத்திற்கு ஒத்துழைத்தும் வருங்காலத்தில் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தமிழ் மக்களின் நலன் கருதி ஒத்துழைப்போம். கர்நாடக மாநிலத்தில் கட்சி சார்ந்து அல்லாது அனைவரும் ஒருங்கிணைந்து மாநிலத்தின் வளர்ச்சிக்கு துணை நிற்கும் நிலையில் நாமும் அதுபோல் செயல்பட வேண்டும்.

பாரத பிரதமர் இந்த விவகாரத்தில் தமிழகத்திற்கு துரோகம் அளிக்காமல் இருக்கவும், அதற்கு தமிழக பாஜ, அவருக்கு தமிழகத்தின் நிலையை உணர்த்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்ட தலைவர் அருள்ராஜ், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.