தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காரைக்குடி ரயில் நிலையத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்: இன்று காலையில் பரபரப்பு

காரைக்குடி: காரைக்குடி ரயில் நிலையத்தில் இன்று காலை கார் திடீரென தீப்பற்றி எரிந்து எலும்புக் கூடான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள செஞ்சைப் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவர் இன்று காலை 5.30 மணியளவில், பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை செல்வதற்காக தனது மனைவியுடன் காரில் ரயில் நிலையம் வந்தார்.சரவணன் என்பவர் காரை ஓட்டி வந்தார். ரயில் நிலையத்தின் முன்புறம் கார் நின்றவுடன் கணேசனும், அவரது மனைவியும் இறங்கி ரயிலில் ஏறச் சென்றனர். டிரைவர் சரவணன் காரில் இருந்த உடைமைகளை எடுத்துச் சென்று ரயிலில் வைத்துவிட்டு, பாக்கியுள்ள பொருட்களை எடுப்பதற்காக காரை நோக்கி வந்தார். அப்போது திடீரென கார் தீப்பிடித்து மளமளவென எரிந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த டிரைவர் உடனடியாக காரைக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

Advertisement

தகவல் அறிந்த கணேசனும், அவரது மனைவியும் ரயிலில் வைத்த பொருட்களை எடுத்துக் கொண்டு கார் இருக்கும் இடத்திற்கு ஓடி வந்தனர். அங்கு கார் கொழுந்துவிட்டு எரிவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தீயணைப்பு வாகனம் வருவதற்கு முன், கார் முற்றிலும் எரிந்து எலும்புக் கூடானது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். கணேசன் தனது சென்னை பயணத்தை ரத்து செய்துவிட்டு, மனைவியுடன் வீடு திரும்பினார். இந்த விபத்து குறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் ரயில் நிலையத்தில் இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

Related News