தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் ஐயப்ப பக்தர்களுக்கு ஓய்வறை கட்டப்படுமா? சாலையோரம் அமர்ந்து சாப்பிடும் நிலை

Advertisement

கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினந்தோறும் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தற்போது சபரிமலை சீசனையொட்டி ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கன்னியாகுமரிக்கு வருகின்றனர். இவ்வாறு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு குமரியில் அடிப்படை வசதிகள் இல்லை என பக்தர்கள் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இதுகுறித்து ஐயப்ப பக்தர்கள் கூறுகையில், ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் சபரிமலை செல்வதற்காக மாலை அணிந்து விரதம் இருந்து வருகிறோம். மேலும் வாகனங்களில் சபரிமலைக்கு செல்லும் வழியில் முக்கிய சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு வருகிறோம்.

இங்கு ஐயப்ப பக்தர்கள் தங்கவும், ஓய்வு எடுக்கவும், உணவு சாப்பிடவும் முறையான தங்கும் அறைகள் இல்லை. தனியார் விடுதிகள் மற்றும் தங்கும் அறைகளில் அதிகம் கட்டணம் வசூலிப்பதால் அங்கு செல்ல முடியவில்லை. தங்கும் அறைகள் இல்லாததால் கடலில் நீராடிவிட்டு சாமி தரிசனம் செய்த பின்னர் ஆங்காங்கே கடற்கரை சாலையோரம், சன்செட் பாயிண்ட் உள்ளிட்ட இடங்களில் அமர்ந்து உணவு சாப்பிட்டு ஓய்வு எடுக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் ஐயப்ப பக்தர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். மேலும் ஐயப்ப பக்தர்கள் வரும் அனைத்து வாகனங்களுக்கும் பேரூராட்சி சார்பில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே ஐயப்ப பக்தர்கள் நலன்கருதி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கன்னியாகுமரியில் ஐயப்ப பக்தர்கள் தங்கி ஓய்வெடுக்கும் வகையில் ஓய்வறை கட்டிடம் கட்ட வேண்டும் என்றனர்.

Advertisement