தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காஞ்சிபுரத்தில் உயர்நிலைப்பள்ளியில் இயங்கிய தொடக்கப்பள்ளி வகுப்பறை பொருட்கள் சேதம்: மர்ம நபர்கள் அட்டூழியம்; போலீசார் விசாரணை

Advertisement

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட உயர்நிலைப்பள்ளியில் செயல்பட்டு வரும் தொடக்கப்பள்ளி வகுப்பறையில் மின்விசிறி, மின்விளக்குகள், கடிகாரம் உள்ளிட்ட பொருட்கள் சேதப்படுத்தி, மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தும்பவனம் தெருவில் ஏகேடி மாநகராட்சி தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் வகுப்பறைகள் சேதமடைந்த நிலையில், அதன் மறுசீரமைப்பு பணியானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், இப்பள்ளி அருகாமையில் செயல்பட்டு வரும் உயர்நிலைப்பள்ளியில், தற்காலிமாக வகுப்புகளானது நடைபெறுகிறது. இங்கு, 300க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர்.

இப்பள்ளியில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்களும் வார விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. இந்த, விடுமுறை சாதமாக பயன்படுத்திக்கொண்ட சமூக விரோதிகள் சிலர், இரவோடு இரவாக பள்ளிக்குள் புகுந்து தொடக்கப்பள்ளி மாணவர்கள் பயிலக்கூடிய வகுப்பறையில் உள்ள மின் விசிறி, மின் விளக்குகள், கடிகாரம், எழுத்து பலகைகள், இருக்கைகள் போன்ற உபகரணங்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், விடுமுறையை முடிந்து வழக்கம்போல நேற்று முன்தினம் பள்ளியினை திறந்து வகுப்பறைக்குள்ளே சென்று பார்த்தபோது, வகுப்பறைக்குள் இருந்த அனைத்து பொருட்களும் சேதமடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், முதற்கட்டமாக சமூக விரோதிகள் பள்ளியின் அருகாமையில் உள்ள கோயில் சுவற்றில் ஏறி பள்ளிக்குள் வந்து அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ள மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சமூக விரோத செயல்கள் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பள்ளிக்கு போதிய பாதுகாப்பு இல்லாததே இச்செயலுக்கு முக்கிய காரணமாக உள்ளதால், இப்பள்ளியில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்றும் பெற்றோர்களின் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement