தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காஞ்சி காமாட்சியம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ.55 லட்சம் மதிப்பிலான ஆக்கிரமிப்பு வீடு மீட்பு: இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

Advertisement

காஞ்சிபுரம்: காஞ்சி காமாட்சியம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ.55 லட்சம் மதிப்பிலான ஆக்கிரமிப்பு வீட்டினை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் நடவடிக்கையால் மீட்கப்பட்டது. காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலுக்கு சொந்தமான வீடு ஒன்று மேற்கு மாடவீதி பகுதியில் உள்ளது. சுமார் ரூ.55 லட்சம் மதிப்பிலான இந்த வீட்டை கோயிலில் பணிபுரிந்த ராமச்சந்திர சாஸ்திரி என்பவர் வாடகைக்கு எடுத்து குடியிருந்து வந்துள்ளார்.

இந்த, வீட்டில் குடியிருக்கும் ராமச்சந்திர சாஸ்திரி, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டிற்கு வாடகை செலுத்தாமல் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதுகுறித்து, கோயில் நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் பலமுறை நோட்டீஸ் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், ராமச்சந்திரா சாஸ்திரி மீது வழக்கு தொடுத்து ஆக்கிரமிப்பு செய்துள்ள வீட்டை காலி செய்வதற்கான ஆணையை பெற்றனர்.

இதனைத்தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கார்த்திகேயன் தலைமையில், காமாட்சியம்மன் கோயில்  செயல் அலுவலர் சீனிவாசன், மேலாளர் பத்ரி நாராயணன், பல்வேறு கோயில்களின் செயல் அலுவலர்கள் கதிரவன், ராஜமாணிக்கம், கேசவன், முத்துலட்சுமி, பூவழகி கோயில் ஆய்வாளர்கள், கோயில் பணியாளர்களுடன் ஆக்கிரமிப்பு செய்துள்ள வீட்டிற்கு வந்தனர்.

பின்பு, போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு செய்திருந்த வீட்டை அதிரடியாக கோயில் பணியாளர்கள் உதவியுடன் காலி செய்து பொருட்களை லாரியில் ஏற்றி அனுப்பி வைத்தனர். பின்னர், ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட வீட்டினை பூட்டி சீல் வைத்து அறிவிப்பு பலகையினை வைத்துவிட்டு சென்றனர். இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அதிரடியாக நடவடிக்கை மேற்கொண்ட சம்பவம் காரணமாக காமாட்சியம்மன் கோயில் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

Related News