கள்ளக்குறிச்சி உயிரிழப்பை வைத்து கபட நாடகமாடுகிறார் எடப்பாடி: கருணாஸ் தாக்கு
Advertisement
எத்தனை முறை மக்கள் பிரச்னையை பேச வந்த திமுகவை சட்டமன்றத்திலிருந்து வெளியேற்றினார் அதுவும் மறந்துவிட்டார் போல, எல்லாம் நாடகம். கள்ளச்சாராய உயிரிழப்பை வைத்து எடப்பாடி பழனிசாமியும், பாஜவும் ஆதாய அரசியல் செய்கின்றனர். அதிமுக ஆட்சியில் நடந்த கள்ளச்சாராய மரணங்கள் மூடி மறைக்கப்பட்டன. ஆனால் இப்போது நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. கள்ளக்குறிச்சி விவகாரத்தில் முதல்வர் நடவடிக்கை எடுக்காமல் இருந்திருந்தால், குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சித்திருந்தால் சி.பி.ஐ. விசாரணை கூட கேட்கலாம் தவறில்லை. ஆனால், அனைத்து நடவடிக்கைகளும் எடுத்ததை பார்த்த பிறகும், எடப்பாடி சி.பி.ஐ. விசாரணை கேட்பது நாடகமே. அதிமுகவின் தொடர் தோல்வியை மூடிமறைக்க எடப்பாடி பழனிசாமி ஆடும் கபடநாடகமாகும்.
Advertisement