தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கலைஞர் கைவினை திட்டம் குறித்து பொய் பிரசாரம் செய்யும் அண்ணாமலைக்கு கண்டனம் : செல்வப்பெருந்தகை பேட்டி

Advertisement

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சத்தியமூர்த்திபவனில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: விஸ்வகர்மா திட்டமும் தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள கலைஞர் கைவினைத் திட்டமும் ஒன்று கிடையாது. இதை வைத்து தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை பொய் பிரச்சாரம் செய்கிறார். 18 வயது என்பது அவர்கள் ஆராய்ச்சி படிப்பிற்கு மேல் படிப்பதற்காக செல்லக் கூடாது என்பதுதான். இதுதான் ஒன்றிய அரசின் எண்ணம். ஆனால் தமிழ்நாடு அரசு திட்டத்தில் அப்படி இல்லை. அதேபோன்று இவர்தான் இத்தொழிலை செய்ய வேண்டும் என்றில்லை. யார் வேண்டுமானாலும் எந்த தொழிலை வேண்டுமானாலும் செய்யலாம் என்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது, பீட்டர் அல்போன்ஸ், கோபண்ணா, சொர்னா சேதுராமன், ராம் மோகன், லெனின் பிரசாத், புத்தன் உடன் இருந்தனர்.

* மோடி-அதானி விவகாரத்தை திசை திருப்ப ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தேசிய முற்போக்கு கூட்டணி ஆளும் ஒன்றிய அரசில் அங்கம் வகிக்கும் மாநில கட்சிகளான பீகார் அரசு, ஆந்திரா அரசு போன்றவை ஒரே நாடு, ஒரே தேர்தல் என்னும் மசோதாவுக்கு ஒத்துழைப்பு வழங்குமா என்பது மிகப்பெரிய சந்தேகம். மேலும், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மகாராஷ்டிரா அரசு ஏற்றுக் கொள்ளுமா?. நாடாளுமன்றத்தில் மோடி - அதானி (மோடானி) விவகாரத்தில் ஜனநாயக வழியில் எதிர்க்கட்சிகள் தங்கள் எதிர்ப்பை எழுப்பி வரும் நிலையில் அதனை மடை மாற்றுவதற்கு இந்த மசோதாவை பாசிச பாஜ கையில் எடுத்துள்ளதோ என்று யூகிக்க தோன்றுகிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement