தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நகைக்கடை பட்டறையில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை அபேஸ் செய்த ஆச்சாரி கைது

Advertisement

பெரம்பூர்: கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் அஸ்வின் (35). இவர், கொளத்தூர் அனுஷியா நகர் சந்திப்பு பகுதியில் தங்க நகை செய்து விற்பனை செய்யும் ஜூவல்லரி நடத்தி வருகிறார். இங்கு, கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம் குட்டம் குளம் பகுதியை சேர்ந்த ராபின் (43) என்பவர், கடந்த 10 வருடங்களாக நகை செய்யும் ஆச்சாரி வேலை செய்து வந்துள்ளார். கடந்த சில வருடங்களாக இவர், தங்கத்தில் பித்தளையை கலந்து ஏமாற்றி வந்துள்ளார். இதனை, கடையின் மேலாளர் எத்திராஜ் சமீபத்தில் கண்டுபிடித்து, இதுகுறித்து ராஜமங்கலம் குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.

அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், ஆச்சாரி ராபின் தங்க கட்டிகளை எடுத்து நகை செய்யும்போது, அதில் சிறிதளவு தங்கத்தை அபேஸ் செய்துவிட்டு, பித்தளை கலந்து ஏமாற்றி வந்தது தெரிய வந்தது. இவ்வாறு அவர் சேகரித்த ரூ.8 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை ஒரு நகைக்கடையில் கொடுத்து செயினாக மாற்றியதும் தெரிய வந்தது. இதையடுத்து, ராபினை கைது செய்து, அவரிடம் இருந்து 45 கிராம் தங்கத்தை மீட்டுள்ளனர். பின்னர், அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Advertisement

Related News