தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜம்மு காஷ்மீர் சட்டபேரவையில் மக்கள் ஜனநாயக கட்சி, பாஜக உறுப்பினர்களிடையே தள்ளுமுள்ளு

Advertisement

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் சட்டபேரவையில் மக்கள் ஜனநாயக கட்சி, பாஜக உறுப்பினர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலையொட்டி முதல் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஆளும் கட்சியினர், அவர்கள் கூட்டணியினர் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட 370 சட்ட பிரிவை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று கடந்த சில தினங்களாக தீர்மானங்களை முன்னெடுக்க முயற்சி மேற்கொண்டனர்.

இதற்கு எதிர்க்கட்சியான பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்றைய தினம் இது தொடர்பான வாக்குவாதம் நடைபெற்ற நிலையில் 2வது நாளான இன்று அவாமி இதிஹாத் கட்சியின் எம்.எல்.ஏ வான குர்ஷித் அகமத் ஷேக் என்பவர் மீண்டும் 370வது சட்ட பிரிவை கொண்டுவர வேண்டும் என்று பதாகையை காட்டினார். சட்டப்பேரவையில் இது போன்ற பதாகைகளை காட்ட கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து பதாகைகளை பாஜகவினர் கிழித்தெறிந்தனர்.

அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. அவைக்காவலர்களும் உள்ளே புகுந்து எம்.எல்.ஏக்களை வெளியே இழுத்து செல்ல முற்பட்ட போது இரு தரப்பினரிடையே கைகலப்பு ஏற்பட்டது. சில எம்.எல்.ஏக்கள் ஆக்ரோஷமாக மேசையின் மீது ஏறி தாவிக்குதித்தனர். ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் இத்தகைய சம்பவம் நிகழ்வது 3வது முறையாகும். இச்சம்பவத்தின் போது 15 நிமிடங்கள் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை பரபரப்பான சுழல் காணப்பட்டது. தற்போது அவை காவலர்கள் பிரச்னைக்குரிய எம்.எல்.ஏக்களை வெளியேற்றியதற்கு பிறகு சுமுகமான விவாதங்கள் தற்போது நடைபெற்று வருகிறது.

 

Advertisement

Related News