தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜமாபந்தி நிகழ்ச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு

Advertisement

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும் 1433ம் பசலி ஆண்டுக்கு வருவாய் தீர்வாயம் நடத்திடவும் கிராம கணக்குகளை தணிக்கை செய்திடவும் வருவாய் தீர்வாய் அலுவலர்கள் நிர்ணயம் செய்தும் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 7ம் தேதி ஜமாபந்தி தொடங்கியது. திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் ஏ.கற்பகம், வட்டாட்சியர் செ.வாசுதேவன் ஆகியோர் மனுக்களை பெற்று வருகின்றனர். இந்நிலையில் எல்லாபுரம் ஒன்றியம், கோடுவெளி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஏ.குமார் கோரிக்கை மனு அளித்தார்.

அதில், அம்பேத்கர் நகர், கலைஞர் நகர் பகுதிகளில் 200க்கும் மேற்பட்டோர் வசித்து வரும் நிலையில் வீட்டுமனை பட்டா இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும். மேலும் கன்னிகாபுரம் ஊராட்சியில் உள்ள வீடுகளின் மேல் மின்கம்பி செல்கின்றது. இதனால் மழைக்காலங்களில் மின் கசிவு ஏற்பட்டு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே அந்த மின்கம்பியை மாற்றி சாலை பக்கமாகவோ அல்லது வீடுகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில் மின்கம்பியை மாற்றி அமைத்து தர வேண்டும். இவ்வாறு அவர் அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News