தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜாபர்கான்பேட்டை பகுதியில் சிறுவன் வெட்டிக்கொலை: அடையாறு ஆற்றில் சடலம் வீச்சு

Advertisement

சென்னை: ஜாபர்கான்பேட்டையில் 17 வயது சிறுவன் சரமாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டு, உடல் அடையாறு ஆற்றில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து, கொலையாளிகளை தேடி வருகின்றனர்.  ஜாபர்கான்பேட்டை காசி திரையரங்கம் அருகே, நேற்று காலை பொதுமக்கள் நடைபயிற்சி செய்தபோது, அடையாறு ஆற்றின் கரையோரம், பலத்த வெட்டுக்காயங்களுடன் சிறுவன் சடலம் ஒன்று கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், உடனே இதுகுறித்து குமரன் நகர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அதன்பேரில், விரைந்து வந்த போலீசார், சிறுவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவன் உடல் கைப்பற்றப்பட்ட இடத்தில் அரிவாள் ஒன்று கிடந்தது. அதை, போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் இறந்த சிறுவன் யார் என விசாரணை நடத்தினர். அதில், எம்.ஜி.ஆர்.நகர் சூளை பள்ளம் பகுதியை சேர்ந்த சஞ்சய் (எ) வெள்ளை சஞ்சய் (17) என்றும், இவன் மீது பல்வேறு வழக்குகள் எம்.ஜி.ஆர்.நகர் காவல் நிலையத்தில் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

முன்விரோதம் காரணமாக யாரேனும் இவனை கொலை செய்தார்களா, என அவனது உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, சஞ்சய் உடன் எப்போது ஒன்றாக சுற்றி வரும் எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த சந்தோஷ் மற்றம் சக்திவேல் ஆகியோர் மீது எங்களுக்கு சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து போலீசார் சந்தோஷ் மற்றும் சக்திவேலை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம் உடல் கைப்பற்றப்பட்ட காசி திரையரங்கம் அருகே உள்ள அடையாறு ஆற்றின் மேம்பாலத்தின் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News