தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இஸ்ரேலை குறிவைத்து ஹிஸ்புல்லா ஏவுகணைத் தாக்குதல்: 150-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசியதால் பதற்றம்

Advertisement

இஸ்ரேல்: இஸ்ரேல் மீது நூற்றுக்கு மேற்பட்ட ஏவுகணைகளை வீசி ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய தாக்குதல்களால் பெரும் பதற்றம் நிலவுகிறது. காஸாவில் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக ஓராண்டுக்கு மேலாக தாக்குதல் நடந்து வரும் நிலையில் லெபனானில் இருந்து இயங்கும் ஈரான் ஆதரவு பெற்று ஹிஸ்புல்லா அமைப்புகளின் நிலைகளையும் தாக்கி வருகிறது. ஹிஸ்புல்லா அமைப்பினரின் பேஜர்கள், வாக்கி டாக்கிகள் மூலம் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 39 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் உளவுப்படை இருந்ததாக லெபனான் குற்றம்சாட்டி உள்ளது.

இந்நிலையில் பேஜர், வாக்கி டாக்கி தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் உளவுப்படை இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேற்று ஒப்புக்கொண்டார். இதனால் கடும் கோபம் கொண்ட ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தொடர்ச்சியாக 150க்கு மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதலை மேற்கொண்டனர். ஏவுகணைகள் ஹைபா, கிரியாய்ட் உள்ளிட்ட நகரங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளை தாக்கியதில் பலர் காயம் அடைந்தனர். ஹிஸ்புல்லாவின் ஏவுகணை தாக்குதல் தொடர்பான காணொளிகளை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருக்கும் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் இதற்கு விரைவில் தக்க பதிலடி தரப்படும் என்று தெரிவித்திருக்கிறார்கள். இதனால் லெபனான் முழுவதுமாக உச்சகட்ட பதற்றம் நிலவி வருகிறது.

 

Advertisement