தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஐஎஸ்எல் கால்பந்து பிளே ஆப்: கடைசி அணியாக சாம்பியன் மும்பை

Advertisement

மும்பை: லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்ததையடுத்து ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் 11வது தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. பிளே ஆப் சுற்றுக்கு 5 அணிகள் முன்னேற, கடைசி இடத்துக்கு ஒடிஷா எப்சி, மும்பை அணிகளுக்கு இடையே போட்டி இருந்தது. ஒடிஷா 24 ஆட்டங்களிலும் விளையாடி 33புள்ளிகளுடன் 6வது இடத்தில் பிளே ஆப் வாய்ப்பில் நீடித்தது. மும்பை இன்னும் ஒரு ஆட்டத்தில் விளையாட வேண்டிய நிலையில் 33 புள்ளிகளுடன் 7வது இடத்தில் இருந்தது. ஆனால் தனது கடைசி லீக் ஆட்டத்தில் பெங்களூர் எப்சியை 0-2 என்ற கணக்கில் மும்பை வீழ்த்தி 36 புள்ளிகளுடன் மும்பை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. அதனால் ஒடிஷாவின் பிளே ஆப் கனவு கலைந்தது. கடந்த ஆண்டு லீக் சுற்றில் 2வது இடம் பிடித்த மும்பை, சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த முறை பிளே ஆப் சுற்றில் கடைசி இடத்தை பிடித்துள்ளது. முதல் 2 இடங்களை பிடித்துள்ள மோகன் பகான் எஸ்ஜி , எப்சி கோவா அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளன. கூடவே முதல் இடம் பிடித்த மோகன் பகான், தொடர்ந்து 2வது முறையாக லீக் சாம்பியன் கேடயத்தை வென்றது. அத்துடன் 3.5 கோடி ரூபாய் ரொக்கப்பரிசும் பெற்றது. அடுத்து 4 இடங்களை பிடித்துள்ள அணிகளான நார்த் ஈஸ்ட்-மும்பை அணிகள் மோதும் முதல் பிளே ஆப் ஷில்லாங்கிலும், பெங்களூர்-ஜாம்ஷெட்பூர் விளையாடும் 2வது பிளே ஆப் பெங்களூரிலும் நடக்கும். இதில் வெற்றி பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். பிளே ஆப், அரையிறுதி சுற்று ஆட்டங்கள் நடைபெறும் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்.

Advertisement