ஐஎஸ்எல் கால்பந்து பிளே ஆப்: கடைசி அணியாக சாம்பியன் மும்பை
Advertisement
இந்த முறை பிளே ஆப் சுற்றில் கடைசி இடத்தை பிடித்துள்ளது. முதல் 2 இடங்களை பிடித்துள்ள மோகன் பகான் எஸ்ஜி , எப்சி கோவா அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளன. கூடவே முதல் இடம் பிடித்த மோகன் பகான், தொடர்ந்து 2வது முறையாக லீக் சாம்பியன் கேடயத்தை வென்றது. அத்துடன் 3.5 கோடி ரூபாய் ரொக்கப்பரிசும் பெற்றது. அடுத்து 4 இடங்களை பிடித்துள்ள அணிகளான நார்த் ஈஸ்ட்-மும்பை அணிகள் மோதும் முதல் பிளே ஆப் ஷில்லாங்கிலும், பெங்களூர்-ஜாம்ஷெட்பூர் விளையாடும் 2வது பிளே ஆப் பெங்களூரிலும் நடக்கும். இதில் வெற்றி பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். பிளே ஆப், அரையிறுதி சுற்று ஆட்டங்கள் நடைபெறும் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்.
Advertisement