தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மேக்ஸ்வெல் இல்லாத ஐபிஎல்: ரசிகர்கள் அதிர்ச்சி

துபாய்: 2026ம் ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். தொடருக்கான மினி ஏலம் துபாயில் வருகிற 16ம் தேதி நடைபெற உள்ளது. மினி ஏலத்தில் பங்கேற்க இதுவரை 1,355 வீரர்கள் பதிவு செய்துள்ள நிலையில், மேக்ஸ்வெல் தனது பெயரை பதிவு செய்யாதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2026ம் ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். தொடருக்கான மினி ஏலம் துபாயில் வருகிற 16ம் தேதி நடைபெற உள்ளது. இந்த மினி ஏலத்தில் பங்கேற்க உள்ள வீரர்கள் பதிவு செய்வதற்கான காலக்கெடு நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இந்தநிலையில் மினி ஏலத்தில் பங்கேற்க இதுவரை 1,355 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.

Advertisement

இந்த மினி ஏலத்தில் 10 அணிகளும் சேர்ந்து 77 வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் அணிகளை பொறுத்தவரை அதிகபட்சமாக கொல்கத்தா அணியிடம் ரூ.64.30 கோடியும்,சென்னை அணியிடம் ரூ.43.40 கோடியும் உள்ளது. இந்த நிலையில், ஐ.பி.எல். மினி ஏலத்தில் பங்கேற்க ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல் தனது பெயரை பதிவு செய்யவில்லை. இது ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடி வந்த ஆண்ட்ரே ரசல், ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறுவதாக சமீபத்தில் அறிவித்தார்.

தற்போது மேக்ஸ்வெல்லும் ஏலத்தில் பங்கேற்க தனது பெயரை பதிவு செய்யாதது கிரிக்கெட் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ரசல், மேக்ஸ்வெல் போன்ற முன்னணி வீரர்கள் ஏலத்தில் இல்லாததால் அடுத்த ஆண்டு நடைபெறும் ஏலத்தில் மேகரூன் கிரீனுக்கு பல அணிகள் போட்டி போடலாம் என தெரிகிறது. ஐ.பி.எல். போட்டிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அணிக்காக விளையாடி வந்த க்ளென் மேக்ஸ்வெல் நடப்பாண்டில் பங்கேற்காத காரணம் குறித்து எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

Advertisement