தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பணத்தாசை பிடித்தவர் என்று கூறும் விமர்சனங்கள் என்னை பாதிக்காது: கிரிக்கெட் வீரரின் மாஜி மனைவி பேட்டி

Advertisement

மும்பை: பணத்தாசை பிடித்தவர் என்று கூறும் விமர்சனங்கள் என்னை பாதிக்காது என்று கிரிக்கெட் வீரரின் மாஜி மனைவி தனஸ்ரீ வர்மா ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். கடந்த 2020ம் ஆண்டு டிசம்பரில் இந்திய கிரிக்கெட் வீரர் யுஜ்வேந்திர சாஹல் - யூடியூபர் தனஸ்ரீ வர்மா ஜோடிக்கு திருமணம் நடந்தது. கொஞ்ச காலம் ஜாலியாக இருந்த இந்த ஜோடி, இந்தாண்டு மார்ச் 20ம் தேதி தங்கள் திருமண உறவை முறித்துக் கொண்டனர். இதைத் தொடர்ந்து, தனஸ்ரீ மீது பணத்தாசை பிடித்தவர் என்று பல்வேறு வதந்திகளும் விமர்சனங்களும் எழுந்தன. இதுகுறித்து தனஸ்ரீ வர்மா அளித்த பேட்டி ஒன்றில், ‘எதிர்மறை விமர்சனங்களும், என்னைப் பற்றி புண்படுத்தும் கருத்துகளை கூறுவதும் என்னை ஒன்றும் பாதித்ததில்லை; இனியும் பாதிக்காது. என்னுடைய இந்தக் காலகட்டத்தில் என்ைன மேம்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறேன்.

நான் எனது வேலையில் கவனம் செலுத்தி வருகிறேன். பல பொறுப்புகளை எடுத்துக் கொண்டு சமாளித்து வருகிறேன். ஒவ்வொரு நாளும் எனக்கு ஒருவித படிப்பினை தருகிறது. ஒவ்வொரு நாளையும் சவாலாக மாற்றி வருகிறேன். என்னை பணத்தாசை பிடித்தவர் என்று கூறுகின்றனர். இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க விரும்பவில்லை’ என்றார். ஐந்து வருடங்களாக திருமணமாகி இருந்த தன மற்றும் யுஸ்வேந்திரா, கொரோனா ஊரடங்கின் போது டேட்டிங் செய்யத் தொடங்கினர். அப்போது கிரிக்கெட் வீரர் யுஜ்வேந்திர சாஹல், தனஸ்ரீ வர்மாவின் ஆன்லைன் நடன வகுப்புகளில் சேர்ந்தார். அவர்கள் டிசம்பர் 2020 திருமணம் செய்து கொண்டனர், இந்தாண்டு மார்ச்சில் விவாகரத்து பெறுவதற்கு முன்பு 18 மாதங்கள் தனித்தனியாக வாழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News