தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டருக்கு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகளுக்கு நேர்காணல்

*பெரம்பலூர் கலெக்டர் நேரில் ஆய்வு

Advertisement

பெரம்பலூர் : பெரம்பலூரில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் சிறப்பு சக்கர நாற்காலி வேண்டி விண்ணப்பித்த மாற்று திறனாளிகளுக்கு நடைபெற்ற நேர்காணலை மாவட்ட கலெக்டர் மிருணாளினி பார்வையிட்டார்.

பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில், மாற்றுதிறனாளிகள் நலத் துறையின்சார்பில், இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் மின்கலத்தால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி வேண்டி விண்ணப்பித்த மாற்றுதிறனாளிகளுக்கு நடத்தப்பட்ட நேர்காணலை மாவட்ட கலெக்டர் மிருணாளினி நேற்று (13ம் தேதி) பார்வையிட்டார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்று திறனாளிகளிடமிருந்து பெறப்படும் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கு தீர்வு காணப்பட்டு வருகிறது. அந்த வகையில், பல்வேறு முகாம்களில் சக்கர நாற்காலி, மின்கல நாற்காலி வேண்டி விண்ணப்பித்த, மாற்று திறனாளிகளால் வழங்கப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் நேற்று நேர்காணல் நடைபெற்றது. இந்த நேர்காணலில் 70க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் கலந்து கொண்டனர்.

இந்த நேர்காணலில், தண்டு வடம் மற்றும் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மாற்று திறனாளிகள் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் சக்கர நாற்காலி ஆகியவைகளை கேட்டு விண்ணப்பித்த மாற்று திறனாளிகளின் பாதிப்புகளை கண்டறிய, அரசு எலும்பு முறிவு மருத்துவர் மற்றும் பாதிப்புத் தன்மைகளை கண்டறிந்து பின்னர் வண்டியை இயக்க தகுதியுடையவர் என ஒப்புதல் தர பெரம்பலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நேர்காணல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து வண்டியை இயக்குவதற்குத் தகுதியுடைய அனைத்து மாற்று திறனாளிகளின் பெயர் பட்டியல்கள் அரசுக்கு அனுப்பி, நிதிஆதாரம் பெற்று, பதிவு மூப்பு அடிப்படையில் அவர்களுக்கான வண்டிகள் வழங்கப்படும்.இந்த நேர்காணல் நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட மாற்றுதிறனாளிகள் நலத்துறை அலுவலர் சீனிவாசன், பெரம்பலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சரவணபவ, அரசு எலும்பு முறிவு மருத்துவர் டாக்டர் தமிழ்செல்வன் உள்பட பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News