தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உட்கட்சி விவகாரத்தில் தலையிட தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை: எடப்பாடி பழனிசாமி புதிய மனு

Advertisement

புதுடெல்லி: உட்கட்சி விவகாரத்தில் தலையிட தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என்று, எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்தில் விளக்க மனுவை தாக்கல் செய்துள்ளார். இரட்டை இலை மற்றும் பொதுச்செயலாளர் வழக்கு சம்பந்தமான தேர்தல் ஆணையம் விசாரிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் புகழேந்தி தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக ஆகிய உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்க தடையில்லை என்று உத்தரவிட்டிருந்தது. மேலும் இரட்டை இலை சின்னம், அதிமுக கட்சி, பொதுச்செயலாளர் ஆகிய விவகாரம் குறித்து சூர்யமூர்த்தி, புகழேந்தி, கே.சி.பழனிசாமி, ஓ.பி.ரவீந்தரநாத் ஆகியோர் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் கொடுத்துள்ளது தற்போது வரையில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் ஒரு விளக்க மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘‘அதிமுக கட்சி தொடர்பாக சூர்யமூர்த்தி என்பவர் அந்த கட்சியை சார்ந்தவர் கிடையாது. மேலும் தேர்தலில் வேறு கட்சியின் சார்பாக அ.தி.மு.க வேட்பாளரையே எதிர்த்து போட்டியிட்டவர். எனவே அவர் அ.தி.மு.க உள்கட்சி விவகாரம் தொடர்பாக மனு அளிக்கவோ, வழக்கு தொடுக்கவோ எந்தவித முகாந்திரமும் கிடையாது. மேலும் அதிமுக கட்சியின் பொதுக்குழு கூட்டம், பொதுச்செயலாளரை தேர்வு செய்வது ஆகிய உட்கட்சி விவகாரம் குறித்து சூர்யமூர்த்தி எழுப்ப முடியாது.

அவர் அதிமுக என்ற கட்சி மற்றும் அதன் விதிகளுக்கு எதிராக செயல்பட்டவர். குறிப்பாக உட்கட்சி விவகாரம் தொடர்பாக ஏதேனும் பிரச்சனை இருந்தால், அதுகுறித்து நீதிமன்றத்தில் தான் முறையிட முடியும். அதாவது உட்கட்சி விவகாரத்தில் தலையிட அதிகாரம் இல்லாத தேர்தல் ஆணையத்திடம் அவர் முறையிட முடியாது.மேலும் உட்கட்சி விவகாரங்களில் தலையிட தேர்தல் ஆணையத்துக்கும் அதிகாரம் இல்லை. இந்த விவகாரம் தேர்தல் ஆணைய விசாரணை வரம்புக்குள்ளும் வராது.எனவே சூர்யமூர்த்தியின் மனுக்களை மேற்கொண்டு எந்தவித விசாரணையும் நடத்தாமல் உடனடியாக நிராகரிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement