தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கடும் வெயில் எதிரொலி கல்லட்டி மலைப்பாதையில் தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி தீவிரம்

Advertisement

ஊட்டி : கடும் வெயில் காரணமாக வனத்துறை சார்பில் கல்லட்டி மலைப்பாதையில் கவுண்டர் பயர் முறையில் தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கி.மீ., பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு புலி உட்பட பல்வேறு வகையான வன விலங்குகள் உள்ளன. மேலும் தேக்கு, ஈட்டி உட்பட விலையுர்ந்த மரங்கள், அரிய வகை தாவரங்கள் உள்ளிட்டவை உள்ளன.

கடந்த ஆண்டு டிசம்பர் வரை மழை நீடித்த நிலையில், வனங்கள் பசுமையாக காட்சியளித்தது. நீர் நிலைகளிலும் நீர் இருப்பு இருந்தது. இந்த சூழலில் ஜனவரி முதல் வாரத்தில் இருந்து உறைபனி பொழிவு துவங்கியது. கடந்த ஆண்டுடை காட்டிலும் இம்முறை உறைபனியின் தாக்கம் சற்று அதிகமாகவே காணப்பட்டது.

இதனால் வனப்பகுதிகளில் உள்ள செடி, கொடிகள், புல்வெளிகள், மரங்கள் காய்ந்து கருகின. பகல் நேரங்களில் வெயிலின் தாக்கமும் அதிகமாக உள்ளது. இதன்காரணமாக, வனங்களில் காட்டு தீ ஏற்பட கூடிய அபாயம் நீடிக்கிறது. இதனை ெதாடர்ந்து வனத்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

பகல் நேரங்களில் வன ஊழியர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மசினகுடியில் இருந்து ஊட்டி வரும் கல்லட்டி மலைப்பாதையில் பைசன்வேலி, கல்லட்டி சோதனை சாவடி உள்ளிட்ட இடங்களில் கவுண்டர் பயர் முறையில் தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகளில் வன ஊழியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். கல்லட்டி மலைப்பாதை வழியாக ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிகம் பயணிப்பதால், இவ்வழியாக பயணிக்க கூடிய சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் புகைப்பிடித்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என வனத்துறை வலியுறுத்தி உள்ளது.

Advertisement

Related News