தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அதிகரித்து வரும் பணவீக்கம் இன்றைய மதிப்பில் ரூ.1 கோடி 30 ஆண்டில் எப்படி மாறும்? பொருளாதார நிபுணர்கள் கருத்து

Advertisement

புதுடெல்லி: இன்றைய மதிப்பில் ரூ.1 கோடி பணத்தை கையில் வைத்திருந்தாலும், அந்த பணத்தின் மதிப்பு அடுத்த 30 ஆண்டுகளில் எப்படி மாறும் என்பது குறித்து பொருளாதார நிபுணர்கள் தெரிவித்த கணிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்றைய பொருளாதார காலக்கட்டத்தை பொருத்தவரையில் கையில் ரொக்கமாக ரூ.1 கோடி பணம் இருந்தால், அடுத்துவரும் எந்த பெரிய செலவையும் கடந்து சென்றுவிடலாம். இன்றைய நடுத்தர குடும்பத்தின் கனவு ரூ.1 கோடி ரொக்கப்பணத்தை எட்டுவதுதான்.

ஓய்வு பெறும் போது கையில் ரூ.1 கோடி கிடைத்தால் அந்த தொகையும், மீதம் உள்ள வாழ்க்கைக்கு போதுமான கணிசமான தொகையாக தோன்றலாம். ஏனெனில் எளிதாக சொந்தவீடு வாங்கலாம், குழந்தைகளை நன்றாக படிக்க வைக்கலாம். ஓய்வுக்கு பிறகு சுற்றுலா போன்ற பல்வேறு திட்டங்களுக்கு உதவியாக இருக்கும். ஆனால் அடுத்த 10, 20, 30 ஆண்டுகளில் இந்த ரூ.1 கோடி ரொக்கத்தொகை போதுமா?. இந்த கேள்விதான் இன்று பலருக்கும் எழுந்துள்ள ஒன்று.

இன்றைய பொருளாதார பணவீக்கத்தை வைத்து இதுபற்றி நிபுணர்கள் கணித்து இருக்கிறார்கள். ஏனெனில் ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கம் காலப்போக்கில் பணத்தின் மதிப்பைக் குறைக்கிறது. எனவே இன்று ரூ.1 கோடி மிகப்பெரிய தொகையாக தோன்றினாலும், அடுத்த 30 ஆண்டுகள் கழித்து இதே ரூ.1 கோடியை பெற்றால் அது போதுமானதாக இருக்காது. அந்த தொகை எதிர்கால நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் போதுமானதாக இருக்காது. ஏனென்றால் பணவீக்கம் காலப்போக்கில் பணத்தின் மதிப்பைக் குறைக்கிறது.

உதாரணமாக, இன்று ஒரு காரின் விலை ரூ. 10 லட்சம் என்றால், 15 ஆண்டுகளில் அதன் மதிப்பு கணிசமாக அதிகமாகும். பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு உணவு அல்லது வாடகைக்கு எவ்வளவு செலவானது, இப்போது எவ்வளவு செலவாகிறது என்பதை கவனித்தாலே, பணவீக்கம் பணத்தின் மதிப்பை எவ்வாறு குறைக்கிறது என்பதை அறியலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பணவீக்க விகிதத்தை 6 சதவீதமாகக் கருதினால் இன்றைய ரூ.1 கோடியின் மதிப்பு அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.55.84 லட்சமாகக் குறையும்.

பணவீக்கத்தால் நீண்ட கால முதலீடுகள் மற்றும் சேமிப்புகள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதை இது விளக்குகிறது. 20 ஆண்டுகளுக்கு பிறகு, 6 ​​சதவீத பணவீக்கத்துடன், ரூ.1 கோடியின் மதிப்பு தோராயமாக ரூ.31.18 லட்சமாக மட்டுமே இருக்கும். 30 ஆண்டுகள் கழித்து பார்த்தால் ரூ.1 கோடியின் மதிப்பு ரூ.17.41 லட்சமாகத்தான் இருக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். எனவே 6 சதவீத பணவீக்கத்தை கருத்தில் கொண்டு அடுத்து வரும் ஆண்டுகளுக்கு ஏற்ப கூடுதல் தொகை சம்பாதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர்.

Advertisement

Related News