தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மகன் கழுத்தை அறுத்து கொன்ற இந்திய வம்சாவளி பெண் தற்கொலை முயற்சி: அமெரிக்காவில் பயங்கரம்

Advertisement

நியூயார்க்: இந்தியாவில் கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த பிரகாஷ் ராஜூ, சரிதா ராஜூ தம்பதி அமெரிக்காவில் குடியேறி அங்கு கலிபோர்னியா மாகாணம் ஆரஞ்ச் நகர் பகுதியில் வசித்து வந்தனர். இவர்களின் மகன் எதின் ராஜூ(11). கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2018ம் ஆண்டு பிரகாஷ் ராஜூ, சரிதா ராஜூ இருவரும் விவகாரத்து பெற்று விட்டனர். விவாகரத்துக்கு பிறகு சரிதா வர்ஜீனியா மாகாணம் பேர்பெக்ஸ் நகரில் வசித்து வந்தார்.

இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி தந்தையுடன் இருந்த மகன் எதின் ராஜூவை, விடுமுறை நாள்களில் சரிதா அழைத்து சென்று தன்னுடன் தங்க வைத்து கொள்வார். அதன்படி அண்மையில் மகன் எதின் ராஜூவை அழைத்து சென்ற சரிதா, டிஸ்னிலேண்ட் செல்வதற்காக சான்டா அனா என்ற பகுதியில் ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளார். கடந்த மார்ச் 19ம் தேதி எதின் ராஜூவை தந்தையிடம் அனுப்ப திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் அன்று காலை அந்த பகுதி காவல்துறையின் அவசர எண்ணை தொடர்பு கொண்ட சரிதா, தன் மகன் எதின் ராஜூவை கழுத்தை அறுத்து கொன்று விட்டதாகவும், தற்கொலை செய்து கொள்ள மாத்திரைகளை சாப்பிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த சான்டா அனா பகுதி காவல்துறையினர் சரிதா தங்கி இருந்த அறையில் எதின் ராஜூ ரத்த வௌ்ளத்தில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர் சரிதாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சைக்கு பிறகு சரிதா கைது செய்யப்பட்டுள்ளார். சரிதா குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 26 ஆண்டுகள் சிறை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என காவல்துறை கூறியுள்ளது.

 

Advertisement

Related News