திருப்பதியில் 20 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்: அலிபிரி சோதனை சாவடியில் அணிவகுத்த வாகனங்கள்
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று சனிக்கிழமை, இன்று ஞாயிற்றுக்கிழமை என வார விடுமுறை நாட்கள் என்பதால் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அதிகளவில் உள்ளது. அதன்படி நேற்று இலவச தரிசனத்தில், வைகுண்டம் காம்ப்ளக்சில் உள்ள 31 அறைகளும் நிரம்பியதால் சிலாதோரணம் வரை 3 கிலோ மீட்டர் வரிசையில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இதனால் இலவச தரிசனத்திற்கு 20 மணி நேரம் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

