மும்பை: மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் சரத்பவார் தலைமையில் ஒருபிரிவாகவும், அஜித்பவார் தலைமையில் இன்னொரு பிரிவாகவும் இயங்குகிறது. இந்த நிலையில் நேற்று புனேயில் உள்ள சரத்பவார் இல்லத்திற்கு அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா சென்றார். அங்கு சரத்பவார் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். அஜித்பவார் அணியில் உள்ள மூத்த தலைவரும், மகாராஷ்ரா அமைச்சருமான சகன் புஜ்பால் நேற்றுமுன்தினம் சரத்பவாரை சந்தித்தார். இந்த நிலையில் சுனேத்ராவும் சந்தித்தது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



