Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆர்ஐஎன்எல் நிறுவனத்தை நவீனப்படுத்த ரூ.11,440 கோடி: மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை குழு ஒப்புதல்

புதுடெல்லி: நஷ்டத்தில் இயங்கி வரும் ராஷ்டீரிய இஸ்பத் நிறுவனத்தை நவீனப்படுத்துவதற்கு ரூ.11,440 கோடியிலான திட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஒன்றிய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. ஆர்ஐஎன்எல் நிறுவனம் என்பது ஒன்றிய அரசின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஒரு பொதுதுறை நிறுவனம் ஆகும்.

ஆர்ஐஎன்எல் நிறுவனம் விசாகப்பட்டினத்தில் உள்ள இரும்பு ஆலையை (விஎஸ்பி) இயக்குகிறது. இது ஆந்திரப் பிரதேசத்தில் அரசாங்கத் துறையின் கீழ் இரும்பு ஆலையாகும். இந்த ஆலை நஷ்டத்தில் இயங்கி வருகிறது.இந்த நிலையில்,பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை குழு கூட்டத்தில் ஆலையின் நவீனப்படுத்தும் பணிக்கு ரூ.11,440 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.