புதுடெல்லி: நிதி ஆயோக் கூட்டத்தில் கேரளா, பீகார், மேற்குவங்கம் உள்பட 5 மாநில முதல்வர்கள் தவிர மற்ற அனைத்து மாநில முதல்வர்களும் நேற்று கலந்து கொண்டனர். அதை தொடர்ந்து இன்று தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வர்களின் ஆலோசனை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில்ஆபரேஷன் சிந்தூர், சாதி கணக்கெடுப்பு மற்றும் மோடி அரசின் மூன்றாவது பதவிக்காலத்தின் முதலாமாண்டு நிறைவு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
Advertisement


