Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உலக அரங்கில் இந்தியாவின் முக்கிய சொத்து மோடி: காங்கிரஸ் எம்பி சசி தரூர் பாராட்டு

புதுடெல்லி: பிரதமர் மோடியின் ஆற்றல், சுறுசுறுப்பு உலக அரங்கில் இந்தியாவுக்கு ஒரு முக்கிய சொத்தாக உள்ளது என்று சசி தரூர் எம்பி பாராட்டினார். காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்பியுமான சசி தரூர் ஒரு பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதாவது: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து ராஜதந்திர ரீதியான நடவடிக்கைகள், தேசிய உறுதிப்பாடு மற்றும் பயனுள்ள தகவல் தொடர்புக்கான ஒரு தருணம். பிரதமர் மோடியின் ஆற்றல், சுறுசுறுப்பு மற்றும் ஈடுபட உள்ள விருப்பம் ஆகியவை உலக அரங்கில் இந்தியாவிற்கு ஒரு முக்கிய சொத்தாக உள்ளது.ஆனால் அதற்கு அதிக ஆதரவு தேவை. இந்தியா எடுத்த ராஜதந்திர ரீதியான முயற்சிகள் தேசிய உறுதிப்பாடு மற்றும் சிறந்த தகவல் தொடர்புக்கான வாய்ப்பாகும். இந்தியா ஒன்றுபட்டால், சர்வதேச தளங்களில் தெளிவு மற்றும் உறுதியுடன் தனது குரலை வெளிப்படுத்த முடியும் என்பதை இது உறுதிப்படுத்தியது.

இந்தியாவின் நடவடிக்கைகள் ஒரு சட்டபூர்வமான தற்காப்புப் பயிற்சி, தொடர்ச்சியான எல்லை தாண்டிய தீவிரவாதத்திற்கு அவசியமான பதில் என்பதை நாங்கள் உன்னிப்பாக விளக்கினோம். இந்தக் கதையின் வெற்றி, பல தலைநகரங்களில் காணப்பட்ட மாற்றத்தில் தெளிவாகத் தெரிந்தது. உதாரணமாக, பாகிஸ்தானில் பொதுமக்கள் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவங்களுக்கு இரங்கல் தெரிவித்து கொலம்பியா தனது வெளியிட்ட அறிக்கையை திரும்பப் பெற்றதும், அதைத் தொடர்ந்து இந்தியாவின் சுய பாதுகாப்புக்கான இறையாண்மை உரிமைக்கான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியதும் ஒரு குறிப்பிடத்தக்க ராஜதந்திர வெற்றியாகும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.