Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வழக்கத்தை காட்டிலும் அதிக மழை அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இந்த காலகட்டத்தில் வழக்கத்தை விட அதிக மழை பெய்துள்ளது. இதனால், மாநிலத்தின் முக்கிய அணைகளில் அதிகளவு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருவதால், அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. ஜூன் முதல் வாரத்தில் 173 டிஎம்சி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது.

வரத்து 3460 ஆயிரம் கனஅடி நீரும், வெளியேற்றம் 12,662 கன அடியும் இருந்தது. ஆனால், தற்போது 190 டிஎம்சி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது, வரத்து 15,680 கனஅடியும், வெளியேற்றம் 7,414 கனஅடியும். கடந்த ஆண்டு இதே காலத்தில் 178 டிஎம்சி தண்ணீர் நீர்த்தேக்கங்களில் சேமிக்கப்பட்டிருந்தது. கிருஷ்ணாநதி படுகையில் கனமழை பெய்து வருவதால் பத்ரா, துங்கபத்ரா, ஆலமட்டி, நாராயணபுரா ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளது.

ஏற்கனவே 87 டிஎம்சி தண்ணீர் வந்துள்ளது. மின் திட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சூபா, லிங்கனமக்கி, வாராஹி நீர்த்தேக்கங்களில் 48 டிஎம்சி மழையும், காவேரி நீர்ப்பிடிப்பு பகுதியில் நல்ல மழை பெய்து வருவதால் கேஆர்எஸ், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி அணைகளில் 38 டிஎம்சி தண்ணீரும் கிடைத்துள்ளது. பருவமழை தொடங்கியதையடுத்து மாநிலத்தின் அணைகளில் ஒட்டுமொத்தமாக 16 டிஎம்சி தண்ணீர் தேங்கியுள்ளது.

கடந்தாண்டு மழை இல்லாததால் வறண்டு கிடந்த அணைகள், இவ்வாண்டு மழையால் நிரம்பி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் மற்றும் கர்நாடக மாநிலத்தின் பெலகாவி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் வட கர்நாடக நதிகளில் வெள்ளம் அதிகரித்து வருகிறது. ஆலமட்டி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. லிங்கனமக்கியில் 13.90 டி.எம்.சி., சுபா அணையில் 30.24, வாராஹியில் 3.10, ஹாரங்கியில் 3.27, கே.ஆர்.எஸ்., 10.73, பத்ரா அணையில் 8.97, காட்பிரபாவில் 5.69, நா.12ல் மலாபிரபா, 13,45. , 18.24 டி.எம்.சி வாணிவிலாச சாகரில் தண்ணீர் சேமிக்கப்படுகிறது.