புதுடெல்லி: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் தலைமைச் செயலர்களின் 4வது தேசிய மாநாடு இன்று தொடங்குகிறது. 2 நாள் நடக்கும் இந்த மாநாடு ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையே உள்ள உறவை பலப்படுத்தும் வகையில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள், அனைத்து யூனியன் பிரதேசங்களின் மூத்த அதிகாரிகள், துறைசார் வல்லுநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள்.
Advertisement

