Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாக்.கிற்குள் புகுந்து 3 முறை தாக்குதல்; ஆபரேஷன் சிந்தூர் முடிவடையவில்லை: பிரதமர் மோடி பேச்சு

அலிப்பூர்துவார்: மேற்கு வங்க மாநிலத்தில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

வங்க மண்ணிலிருந்து, 140 கோடி இந்தியர்களின் சார்பாக, ‘ஆபரேஷன் சிந்தூர்’ இன்னும் முடிவடையவில்லை என்று நான் அறிவிக்கிறேன். பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா மீது பயங்கரவாத தாக்குதல் நடந்தால், எதிரி அதற்கு மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று இந்தியா உலகிற்குத் தெரிவித்துள்ளது.

நாங்கள் உங்கள் வீட்டிற்குள் நுழைந்து உங்களை மூன்று முறை கொன்றுவிட்டோம் என்பதை பாகிஸ்தான் புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் எல்லை தாண்டிய பயங்கரவாத உள்கட்டமைப்பை அழித்தோம், அதை பாகிஸ்தான் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை.

பாகிஸ்தான் அதன் தொடக்கத்திலிருந்தே, பயங்கரவாதம் மற்றும் வன்முறையின் இனப்பெருக்கக் களமாக இருந்து வருகிறது. ஆனால் இந்தியா மாறிவிட்டது. இதுபோன்ற கோழைத்தனமான செயல்களை நாங்கள் இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம். அதற்கு ஆபரேஷன் சிந்தூர் எங்கள் உறுதியான பதில். இவ்வாறு அவர் பேசினார்.