தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்தியாவுடன் கடற்பயிற்சியில் ஈடுபட்ட 2வது ஈரான் போர்க்கப்பலில் இன்ஜின் கோளாறு: கப்பலில் இருந்த 204 வீரர்களை இலங்கை மீட்டது

கொழும்பு: கடந்த மாதம் விசாகப்பட்டினத்தில் நடந்த மிலன் 2026 என்ற சர்வதேச கடற்படை பயிற்சியில் பங்கேற்று விட்டு ஈரானை சேர்ந்த கடற்படை போர் கப்பல் ஐஆர்ஐஎஸ் தேனா கடந்த 4ம் தேதி காலையில் இலங்கைக்கு அருகே கடலில் சென்று கொண்டிருந்தது. அப்போது அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் மூலம் தாக்குதலுக்கு உள்ளாகி கடலில் மூழ்கியது.

Advertisement

இதில் 87 வீரர்கள் உயிரிழந்தனர். 32 பேர் படுகாயமடைந்தனர். மீதம் உள்ள 61 பேர் மாயமானதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து விசாகப்பட்டினத்தில் நடந்த கடற்பயிற்சியில் பங்கேற்று விட்டு ஈரானின் இன்னொரு போர் கப்பல் ஐஆர்ஐஎஸ் புஷேர் நேற்றுமுன்தினம் கொழும்பு அருகே வந்த போது அதன் இன்ஜினில் கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஈரான் கப்பல் இலங்கையில் நுழைய அனுமதி கேட்டிருந்தது. அந்த கப்பல் இலங்கை கடல் எல்லைக்கு அருகில் நங்கூரமிடப்பட்டிருந்த நிலையில் காணப்பட்டது. இந்த நிலையில் புஷேர் கப்பலில் இருந்த 204 பேர் மீட்கப்பட்டு கொழும்புக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் என்று இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

Advertisement

Related News