தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வறுமையை ஒழிப்பதில் இந்தியா குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்துள்ளது: ஐநா சபை கூட்டத்தில் திருச்சி சிவா உரை

Advertisement

வாஷிங்டன்: வறுமையை ஒழிப்பதில் இந்தியா குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்துள்ளதாக ஐநா சபை கூட்டத்தில் உரையாற்றிய மாநிலங்களவை திமுக குழு தலைவர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார். ஐநா சபையின் 79வது பொதுசபை கூட்டத்தை தொடர்ந்து 12 உறுப்பினர்கள் கொண்ட இந்திய நாடாளுமன்ற குழு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐநா சபைக்கு சென்றுள்ளது.

வரும் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் பல்வேறு அமர்வுகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஐநா சபையின் சமூக மற்றும் பொருளாதாரத்திற்கான அறிக்கை குறித்த அமர்வில் பங்கேற்று இந்தியா சார்பில் மாநிலங்களவை திமுக குழு தலைவர் திருச்சி சிவா உரை ஆற்றினார்.

அப்போது அவர் இந்தியாவில் வறுமையை ஒழிப்பதில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் இந்தியாவில் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார். உலகமே ஒரே குடும்பம் தான் என்று கூறிய அவர் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

முன்னதாக இந்திய நாடாளுமன்ற குழுவினர் ஐநா சபை வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினர். மேலும் இந்தியாவிற்கும் ஐநா சபைக்கும் இடையிலான நெருக்கமான நல்லுறவு குறித்த பல்வேறு அமர்வுகளிலும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் பல்வேறு சிறப்பு அமர்வுகளில் உரையாற்றி வருகின்றனர்.

 

Advertisement