தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வரி ஏய்ப்பு புகார்: ட்ரூகாலர் அலுவலகங்களில் வருமான வரி சோதனை

Advertisement

புதுடெல்லி: வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, இந்தியாவில் உள்ள ட்ரூகாலர் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். சுவீடன் நாட்டை சேர்ந்த ட்ரூகாலர் நிறுவனம் தனது ஆப் மூலமாக, செல்போனில் சேமிக்கப்படாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை அடையாளப்படுத்தி, விளம்பர அழைப்புகளை தடுக்க உதவுகிறது. உலகெங்கிலும் சுமார் 4.25 கோடி பேர் இந்த ஆப்பை பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் ட்ரூகாலர் அலுவலகங்கள் பெங்களூரு, மும்பை, குருகிராமில் உள்ளன. இந்நிலையில், இந்நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக வருமான வரித்துறைக்கு பல்வேறு புகார்கள் வந்துள்ளன.

அதன் அடிப்படையில் ட்ரூகாலர் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர். வருமான வரி தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்தனர். ட்ரூகாலர் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘வருமான வரி சோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குகிறோம். எங்கள் நிறுவனம் அனைத்து விதிகளுக்கும் உட்பட்டு வெளிப்படையாக செயல்படுகிறது’ என கூறி உள்ளது.

Advertisement