தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழ்நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வு.. ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.200 விற்பனை: பொதுமக்கள் கவலை..!!

Advertisement

சென்னை: தமிழ்நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்ந்ததால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் அரிசி, பருப்பு என்று உணவு பொருட்களின் விலை ஒவ்வொரு மாதமும் அதிகரித்து கொண்டே செல்கிறது. அந்தவகையில் முக்கிய உணவு பொருட்களின் ஒன்றான துவரம் பருப்பு விலை கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது. 3 மாதங்களுக்கு முன்பு வரை கிலோ ரூ.130 முதல் ரூ.140க்கு விற்பனையான துவரம் பருப்பின் விலை தற்போது ரூ.180 முதல் ரூ.200ஆக விலை அதிகரித்துள்ளது. வடமாநிலங்களில் இருந்து வரத்து குறைந்ததே துவரம் பருப்பு விலை உயர்வுக்கு காரணம் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

துவரம் பருப்பின் விலை உயர்ந்துள்ளதால் மாதம் 10 முதல் 15 நாட்கள் பருப்பு குழப்பு வைத்தவர்களின் நிலை மாறியுள்ளது. மாதம் 2 கிலோ துவரம் பருப்பு வாங்கிய பல இல்லத்தரசிகள் தற்போது மாதம் அரை கிலோ மட்டுமே வாங்கும் நிலை உள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர். ஒரே மாதத்தில் துவரம் பருப்பின் விலை கிலோவுக்கு ரூ.50 உயர்ந்துள்ளது. இதனால் துவரம் பருப்பின் விற்பனை மந்தமடைந்துள்ளது. சீசன் நேரத்தில் துவரம் பருப்பின் விலை உயர்ந்து இருப்பதால் இப்போதைக்கு அதன் விலை குறைய வாய்ப்பில்லை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Advertisement