தமிழ்நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வு.. ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.200 விற்பனை: பொதுமக்கள் கவலை..!!
Advertisement
துவரம் பருப்பின் விலை உயர்ந்துள்ளதால் மாதம் 10 முதல் 15 நாட்கள் பருப்பு குழப்பு வைத்தவர்களின் நிலை மாறியுள்ளது. மாதம் 2 கிலோ துவரம் பருப்பு வாங்கிய பல இல்லத்தரசிகள் தற்போது மாதம் அரை கிலோ மட்டுமே வாங்கும் நிலை உள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர். ஒரே மாதத்தில் துவரம் பருப்பின் விலை கிலோவுக்கு ரூ.50 உயர்ந்துள்ளது. இதனால் துவரம் பருப்பின் விற்பனை மந்தமடைந்துள்ளது. சீசன் நேரத்தில் துவரம் பருப்பின் விலை உயர்ந்து இருப்பதால் இப்போதைக்கு அதன் விலை குறைய வாய்ப்பில்லை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
Advertisement