தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அடிப்படை உரிமைக்கு பாதிப்பு; ஜாமீன் மனுக்களை தீர்ப்பதில் ஒருநாள் கூட தாமதம் கூடாது: உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தல்

Advertisement

புதுடெல்லி: ஜாமீன் மனுக்களை தீர்ப்பதில் ஏற்படும் ஒரு நாள் தாமதம் கூட பொதுமக்களின் அடிப்படை உரிமையை பாதிக்கிறது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு அறிவுறுத்தி உள்ளது. அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ஜாமீன் மனு நிலுவையில் உள்ளதாகவும், அதில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் கூறி பாதிக்கப்பட்டவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிஆர் கவாய் மற்றும் கேவி விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறும்போது, ‘‘ஜாமீன் மனுக்களை நீதிமன்றங்கள் பல ஆண்டுகளாக நிலுவையில் வைத்திக்கும் நடைமுறையை நிராகரிக்க வேண்டும். ஜாமீன் மனுவை தீர்ப்பதில் ஒரு நாள் தாமதம் செய்வது கூட குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மோசமாக பாதிக்கிறது. தனிநபர் சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை உச்சநீதிமன்றம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகின்றது. இந்த வழக்கு எந்த நீதிபதியின் முன்வைக்கப்படுகிறதோ அதே தேதியில் இந்த வழக்கை எடுத்துக்கொள்ள வேண்டும், முடிந்தவரை விரைவாக முடிவு செய்யுங்கள். வேறு ஏதும் காரணம் இருந்தால் நவம்பர் 11ம் தேதி முதல் இரண்டு வாரங்களுக்குள் இந்த வழக்கை முடிக்க வேண்டும்” என்று அறிவுறுத்தி மனுவை தள்ளுபடி செய்தனர்.

Advertisement

Related News