சென்னை ஐ.ஐ.டி., வன வாணி பள்ளியில் உரிய அனுமதியின்றி மாணவர்களுக்கு தாங்கு திறன் சோதனை: பள்ளிக்கல்வித்துறை விசாரணை
Advertisement
இது குறித்து புகார் அளித்தும் சென்னை ஐஐடி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என பெற்றோர்கள் கூறிய நிலையில் பள்ளிக்கல்வித்துறை தலையிட்டு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. வன வாணி பள்ளி முதல்வரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பள்ளி கல்வித்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட குழு விசாரணையை தொடங்கியுள்ள நிலையில் பெற்றோர்கள் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பு கருத்துகளை தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் விதிகள் மீறப்படவில்லை என விளக்கமளித்த சென்னை ஐ.ஐ.டி நிர்வாகம் மாணவர்களுக்கு மருத்துவ சோதனைகள் எதுவும் நடத்தப்படவில்லை என்றும் ஊக்க மருந்து ஏதும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
Advertisement