தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஓட்டல்களுக்கு மதிப்பீடு வழங்கினால் பணம் தருவதாக கூறி பட்டதாரி வாலிபரிடம் ரூ.7.31 லட்சம் அபேஸ்: 2 பேர் கைது

Advertisement

சென்னை: சென்னை அசோக்நகரில் உள்ள மாநில சைபர் க்ைரம் தலைமையகத்தில், கடந்த அகஸ்ட் மாதம், பட்டதாரி ஒருவர் புகார் ஒன்றை அளித்தார். அதில், டெலிகிராம் செயலி மூலம் தொடர்பு கொண்ட ஒருவர், தனியார் நிறுவன இணையதளத்தில் பணியாற்றுவதாகவும், எங்கள் நிறுவனம் வாடிக்கையாளர்களின் மதிப்பீடு அளிப்பதன் மூலம் நட்சத்திர ஓட்டல்களை முதன்மைப்படுத்தும் பணியை செய்து வருகிறது. நீங்கள் வீட்டில் இருந்தே குறிப்பிட்ட ஓட்டல்களுக்கு மதிப்பெண்கள் வழங்கும் பணி செய்தால், உங்களது வங்கி கணக்கிற்கு தினமும் அதற்கான கமிஷன் வரவு வைக்கப்படும் என்று கூறினார்.

அதன்படி, நான் முதலில் மதப்பீடு செய்தபோது, அதற்கான கமிஷனர் ரூ.959 எனது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. பிறகு தொடர்பு கொண்ட அந்த நபர், எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக கமிஷன் தருவதாக கூறினார். அதன்படி ரூ.8 ஆயிரம் செலுத்தியதும், அதற்கான கமிஷனாக ரூ.15,917 எனது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. அதன்பிறகு பல்வேறு காரணங்கள் கூறி மொத்தம் 7,31,166 ரூபாயை அவர் கூறிய பல்வேறு வங்கி கணக்கில் செலுத்தினேன்.

பிறகு கமிஷன் உட்பட மொத்தம் ரூ.10.90 லட்சம் எனது வங்கி கணக்கில் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அந்த பணத்தை என்னால் எடுக்க முடியவில்லை. பிறகு அந்த பணத்தை எடுப்பது குறித்து கேட்தற்கு மேலும், ரூ.5.45 லட்சம் செலுத்தினால் முழு பணமும் வரவு வைக்கப்படும் என்று தெரிவித்தனர். அதன் பிறகு இது மோசடி என தெரியவந்தது. எனவே சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்து எனது பணத்தை பெற்று தர வேண்டும்.

இவ்வாறு தெரிவித்து இருந்தார். இதுகுறித்து மாநில சைபர் க்ரைம் உயர் அதிகாரிகள், பணம் அனுப்பட்ட வங்கி கணக்கு விவரங்களை வைத்து விசாரணை நடத்திய போது, தருமபுரி பகுதியில் உள்ள 5 வங்கி கணக்குகளில் பணம் வரவு வைக்கப்பட்டது தெரியவந்தது. உடனே மோசடியில் ஈடுபட்ட தருமபுரியை சேர்ந்த செல்வக்குமார் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த திருவாரூரை சேர்ந்த கவுதம்குமார் அகிய 2 பேரை கைது செய்தனர்.

Advertisement

Related News