தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மருத்துவமனையில் தர்மேந்திரா சிகிச்சை பெற்றபோது ரகசிய வீடியோ எடுத்த ஊழியர் கைது

மும்பை: பழம்பெரும் இந்தி நடிகர் தர்மேந்திரா (89), சமீபத்தில் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியூ) சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சைக்குப் பிறகு உடல்நலம் தேறிய அவர், கடந்த 12ம் தேதி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். தற்போது அவர் வீட்டில் ஓய்வெடுத்து வரும் நிலையில், அவர் மருத்துவமனையில் இருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

Advertisement

தர்மேந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, அவரது குடும்பத்தினர் அவரை சூழ்ந்து நின்று கண்ணீருடன் இருந்த உணர்ச்சிப்பூர்வமான தருணங்களை மருத்துவமனை ஊழியர் ஒருவர் தனது செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவில் தர்மேந்திரா படுக்கையில் இருக்க, அவரது மகன்கள் சன்னி தியோல், பாபி தியோல், முதல் மனைவி பிரகாஷ் கவுர் மற்றும் பேரன்கள் உடனிருந்தனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், வீடியோவை எடுத்த ஊழியரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement