தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆணவ படுகொலைகளை தடுப்பது எப்படி? தமிழக அரசுக்கு பரிந்துரை அளிக்க முன்னாள் நீதிபதி தலைமையில் குழு

சென்னை: உள்துறை செயலாளர் தீரஜ்குமார் நேற்று வெளியிட்ட அரசாணையில் கூறி இருப்பதாவது: அக்டோபர் 17ம் தேதி சட்டப்பேரவையில் அறிவிப்பு ஒன்றை முதல்வர் வெளியிட்டார். அதில், தமிழகத்தில் நடக்கும் ஆணவப் படுகொலைகளை தடுக்கும் விதத்தில், அரசியல் கட்சிகள், சட்ட நிபுணர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள், பொதுமக்கள் ஆகியோரின் கருத்துகளை கேட்டறிந்து அரசுக்கு பரிந்துரைகளை வழங்குவதற்காக, சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி கே.என்.பாஷாவின் தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்படும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

Advertisement

இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வி.பழனிகுமார், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி எஸ்.ராமநாதன் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட கமிஷனை அமைக்க உத்தரவிடப்படுகிறது. இந்த கமிஷன், ஆணவக் கொலைகளை தடுப்பது தொடர்பாக அரசியல் கட்சிகள், சட்ட நிபுணர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள், பொதுமக்கள் ஆகியோரின் கருத்துகளை கேட்டறிய வேண்டும். அதை பரிந்துரைகளாக வடிவமைக்க வேண்டும்.

மேலும், ஆணவக் கொலைகள் தொடர்பான அரசியல் சாசனம், தற்போதுள்ள சட்டங்கள், ஆணைகள், மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் உள்ள கொள்கைகள் ஆகியவற்றை ஆய்வு செய்து, இதுபோன்ற கொலைகளுக்கு எதிரான சட்ட வடிவமைப்பை உருவாக்க வேண்டும். இந்த பணிகளை ஒருங்கிணைத்து அறிக்கையாக அரசுக்கு இன்னும் 3 மாதத்திற்குள் அளிக்க வேண்டும்.

Advertisement

Related News