தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சரித்திர புத்தகத்தில் புதிய அத்தியாயம் இந்தியாவிலேயே வறுமை இல்லாத முதல் மாநிலம் கேரளா: முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவை இந்தியாவில் வறுமை இல்லாத முதல் மாநிலமாக முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார்.  இந்தியாவிலேயே முதன்முதலாக கேரளா வறுமை இல்லாத மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் பினராயி விஜயன் இதை அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதற்காக சிறப்பு சட்டசபை கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பிரிவு 300ன் படி முதல்வர் பினராயி விஜயன் இந்தியாவிலேயே முதன் முதலாக கேரளா வறுமை இல்லாத மாநிலமாக மாறி உள்ளதாக அறிவித்தார்.

Advertisement

ஆனால் இது வெறும் ஏமாற்று வேலை என்றும், தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் மக்களை ஏமாற்றுவதற்கான நாடகம் என்று கூறி சட்டசபை கூட்டத்தை காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் மம்மூட்டி, சபாநாயகர் ஷம்சீர் மற்றும் கேரள அமைச்சர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதில் முதல்வர் பினராயி விஜயன் பேசியது: கடந்த 2021ல் இடதுசாரி கூட்டணி அரசு மீண்டும் பொறுப்பேற்றபோது கேரளாவில் தீவிர வறுமை ஒழிப்புத் திட்டத்தை நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டது. இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக கேரளாவை தீவிர வறுமை இல்லாத மாநிலமாக மாற்றுவதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். உலக வங்கியின் வரையறையின்படி தீவிர வறுமை என்பது ஒரு நபர் ஒரு நாளைக்கு ரூ.180க்கும் குறைவான வருமானத்தில் வாழ்வதாகும்.

கடந்த 2021ல் இந்த திட்டத்தை கொண்டு வந்த போது கேரளாவில் 64,006 குடும்பத்தினர் தீவிர வறுமை பட்டியலில் இருந்தனர். தற்போது கேரளா வறுமை இல்லாத மாநிலமாக மாறியுள்ளது. குழந்தை இறப்பு மற்றும் பிரசவ இறப்பில் அமெரிக்காவை விட கேரளா முன்னணியில் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

* 8 மாதங்களுக்குப் பின் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மம்மூட்டி

நடிகர் மம்மூட்டி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 8 மாதங்களுக்கு மேலாக எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் சுமார் 8 மாதங்களுக்குப் பின் முதன்முதலாக நடிகர் மம்மூட்டி கேரளாவை வறுமை இல்லாத மாநிலமாக அறிவிக்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நடிகர்கள் கமல், மோகன்லால் கலந்து கொள்ளவில்லை.

Advertisement

Related News