அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள உயர் அழுத்த காற்று இணைய வாய்ப்பு அனைத்து மாவட்டங்களிலும் இன்று முதல் கனமழை பெய்யும்
15ம் ேததியும் கனமழை பெய்யும். கோடை வெயில் தெரியாத அளவுக்கு மழை பெய்து குளிர்விக்கப் போகிறது. இந்நிலையில் நேற்று மதிய நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, விருதுநகர், மதுரை,தூத்துக்குடி மாவட்டங்களிலும் அதைத் தொடர்ந்து ராமநாதபுரம், சிகவகங்கை மாவட்டத்திலும் மழை பெய்யும். மதியம் 3 மணிக்கு மேல் திண்டுக்கல், கோவை, நீலகிரி, ஈரோடு கரூர் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களிலும் மழை பெய்தது. பிறகு இந்த மழைப் பொழிவு திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர் என்று நெருங்கி வந்து நள்ளிரவில் டெல்டா மாவட்டத்திலும் அதை ஒட்டிய மாவட்டங்களிலும் மழை பெய்தது. கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்தது.
கிழக்கில் இருந்து வீசும் காற்றும் மேற்குப் பகுதியில் இருந்து வீசும் காற்றும் இன்று இணையும் வாய்ப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்யும். வட கடலோரம், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இரவு நேரத்திலும் மழை பெய்யும். அதன் தொடர்ச்சியாக 9ம் தேதி மேலும் பரப்பில் அதிகரித்து மழை பெய்யும். 12ம் தேதி முதல் கனமழை பெய்யும். வங்கக் கடல், அரபிக் கடல் பகுதிகளில் உயர் அழுத்த காற்று நீடித்து, ஒருபுறம் நீராவிக் காற்றையும் குவிக்கும் போது மழை கனமழையாக இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக ஈரோடு பகுதியில் 103.6 டிகிரி வெயில் ெகாளுத்தியது. வேலூர், திருப்பத்தூர், சேலம், திருச்சி, சென்னை 100 டிகிரி வெயில் நிலவியது.