டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் அனைத்து மதுபானங்களுக்கும் ரசீது வழங்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் அனைத்து மதுபானங்களுக்கும் ரசீது வழங்க வேண்டும் என்று டாஸ்மாக் நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுபானம் வாங்குவோருக்கு ரசீதுகள் வழங்கப்படவில்லை என்று உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் தெரிவித்துள்ளார். உத்தரவை அமல்படுத்தியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு 7ம்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.


