தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சுகாதார நிலையங்களில் பாம்பு, நாய் கடிக்கு போதுமான மருந்து: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்

Advertisement

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ கு.செல்வபெருந்தகை (காங்கிரஸ்) பேசுகையில், எங்கு பார்த்தாலும், வசநாய், மசநாய், சொறிநாய், வெறிநாய் எல்லாம் கடிக்கிறது. இதற்கு உடனடியாக சிகிச்சை அளிப்பதற்காக அனைத்து மருத்துவமனைகளிலும் மருந்துகளின் இருப்பு இருக்கிறதா, அப்படி நாய் கடித்தால் எத்தனை மணிநேரத்திற்குள் மருந்தை உட்கொள்ள வேண்டும் ” என்றார்.

இதற்கு பதில் அளித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், இந்த அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்னால், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களின் எண்ணிக்கை 2,286 இருந்தன. கிராமப்புறங்களில் அமைந்திருக்கிற மருத்துவ கட்டமைப்பு இங்குதான் அதிகமாக இருக்கிறது. இங்குள்ள இடங்களில் பாம்புகடிக்கும், நாய்கடிக்கும் மருந்துகள் இல்லாமல் இருந்தன.

பாம்புக்கடி மற்றும் நாய்கடியைப் பொறுத்தவரையில், கிராமங்கள் மற்றும் மலைவாழ் கிராம மக்கள்தான் இதனால் அதிகமாகப் பாதிப்புக்குள்ளாகிறார்கள். இந்த அரசு அமைந்ததற்கு பிறகு பாம்புக்கடி மருந்தும், நாய்க்கடி மருந்தும் 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக இருப்பு வைக்கப்பட்டிருக்கிறது. எனவே, பாம்புக்கடிக்கும், நாய்க்கடிக்கும் கிராமப்புறங்களில் பயமில்லை என்ற வகையில் மருத்துவக் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டிருக்கிறது” என்றார்.

Advertisement

Related News