தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரியானா மாநில மாணவர் இங்கிலாந்தில் படுகொலை: குடும்பத்தினர் கதறல்; போலீசார் விசாரணை

லண்டன்: இங்கிலாந்தில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட இந்திய மாணவரின் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இது குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்கிலாந்தின் வொர்செஸ்டர் பகுதியில் உள்ள பார்போர்ன் சாலையில் கடந்த நவம்பர் 25ம் தேதி வாலிபர் ஒருவர் கத்திக்குத்து காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவரை மீட்ட போலீசார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபர் இந்தியாவின் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த விஜய் குமார் (30) என்பது தெரியவந்தது.

Advertisement

இவர் பிரிஸ்டலில் உள்ள மேற்கு இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த மாணவர் ஆவார். இந்த கொலை வழக்கு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 5 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட ஆறாவது நபர் மீது எவ்வித நடவடிக்கையும் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, கொலைக்கான காரணம் மற்றும் குற்றவாளிகள் குறித்து வெஸ்ட் மெர்சியா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இங்கிலாந்து மற்றும் இந்தியாவில் உள்ள விஜய் குமாரின் குடும்பத்தினர், அவரது உடலை விரைவாகத் தாயகம் கொண்டு வரவும், கொலை குறித்து நியாயமான விசாரணை நடத்தவும் தூதரக உதவியை நாடியுள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் போலீசாரை அணுகுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News