தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கும்மிடிப்பூண்டியில் அகதிகள் முகாமில் புனித வெள்ளி பிரார்த்தனை

Advertisement

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் நேற்று புனித வெள்ளி தினத்தை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. மேலும், கும்மிடிப்பூண்டி பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நடைபெற்ற புனித வெள்ளி பிரார்த்தனை நிகழ்ச்சியில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர். இந்தியா உள்பட உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட நிகழ்வை, ஆண்டுதோறும் கிறிஸ்தவ மக்கள் புனித வெள்ளி தினமாக அனுசரித்து வருகின்றனர்.

அதேபோல், இந்தாண்டு நேற்று புனித வெள்ளி நிகழ்வை தொடர்ந்து கும்மிடிப்பூண்டி இலங்கை முகாம், ஆரம்பாக்கம், கவரப்பேட்டை, மாதர்பாக்கம். சுண்ணாம்புகுளம், தேர்வழி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பிராரத்தனைகள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக, கும்மிடிப்பூண்டியில் இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் உள்ள இருதய ஆண்டவர் தூய அண்ணல் ஆலயத்தில் நேற்று பங்குச்சந்தை ஆரோக்கிய வேளாங்கண்ணி ஸ்டாலின் தலைமையில் புனித வெள்ளி சிலுவை பாதை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் இயேசு போன்ற ஒப்பனையுடன் ஒருவர் சிலுவையை சுமந்து செல்ல, அவர் பின்னால் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் ஊர்வலமாக சென்றனர். அதேபோல், ஆரம்பாக்கத்தில் உள்ள மாதா கோவில் சார்பில், பாதிரியார் பாப்பையா தலைமையில் புனித வெள்ளியை ஒட்டி சிலுவை பாதை எனும் தியான ஊர்வலம் நடைபெற்றது. இதில், இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நிகழ்வு தத்ரூபமாக நடித்து காட்டப்பட்டது. இதில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் பாடல்கள் பாடியும், இறைவனை பிரார்த்தனை செய்தபடி ஊர்வலமாக சென்றனர்.

Advertisement