தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கும்மிடிப்பூண்டி பேரூராட்சி பகுதியில் தாழ்வான சாலையில் தேங்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதி

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் உள்ள ஜெய்ஹிந்த் நகரில் தாழ்வான சாலை அமைந்திருப்பதால், அங்கு அதிகளவில் மழைநீர் வெள்ளம் தேங்கி நிற்கிறது. இதனால் அவ்வழியே சென்று வரும் மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். அங்குள்ள கால்வாயை சீரமைக்கவும், சாலையை உயர்த்தி தரமாக அமைப்பதற்கு மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement

கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு 1வது வார்டான ஜெய்ஹிந்த் நகர் முதல் மேட்டு காலனி வரையில் வசிக்கும் மக்கள், பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரிகளையும் முறையாக செலுத்தி வருகின்றனர். இதன்மூலம் பேரூராட்சி பகுதிகளில் மக்களுக்கு தேவையான குடிநீர், சாலை வசதி, மின்விளக்கு, கொசுமருந்து அடித்தல், குப்பை அள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ஜெய்ஹிந்த் நகர் 2வது தெருவில் நீண்ட காலமாக தாழ்வான நிலையில் சாலை உள்ளது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் மழைக் காலத்தின்போது, இங்குள்ள சாலையில் மழைநீர் வெள்ளமாக தேங்கி நிற்பதால் பலத்த சேதமடைந்து உள்ளன. இதன்மூலம் கொசு உற்பத்தி அதிகரித்து, அப்பகுதி மக்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்தொற்றுகள் பரவி வந்தன. மேலும், இச்சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் நடந்து செல்லும்போது, அவ்வழியே செல்லும் வாகனங்களில் இருந்து தெறிக்கும் சேறுகளால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இச்சாலையை உயர்த்தி தரமாக அமைத்து தரவேண்டும் என்று பேரூராட்சி இணை இயக்குனர் மற்றும் பேரூராட்சி அலுவலகத்துக்கு பலமுறை இப்பகுதி மக்கள் புகார் மனு அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது பருவமழை காரணமாக கும்மிடிப்பூண்டி, ஆரம்பாக்கம், கவரப்பேட்டை, மாதர்பாக்கம் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதில் ஜெய்ஹிந்த் நகர் 2வது தெருவில் வழக்கம் போல் மழைநீர் வெள்ளமாக தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.எனவே, ஜெய்ஹிந்த் நகர் 2வது நகரில் உள்ள மழைநீர் கால்வாயை முறையாக சீரமைத்து, இங்குள்ள சாலையை உயர்த்தி தரமாக அமைத்து தருவதற்கு மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement