தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை-கரூர் அரசு பஸ்சுக்குள் மழை அமைச்சரிடம் பயணி புகார் அதிகாரி உடனடி சஸ்பெண்ட்

Advertisement

கோவை: சென்னையில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு கரூர் பேருந்து நிலையத்திற்கு அரசு விரைவு பேருந்து புறப்பட்டது. 30க்கும் மேற்பட்டோர் இந்த பேருந்தில் பயணம் செய்தனர். அப்போது பலத்த மழை பெய்ததால் பேருந்தில் இருந்த பழுது காரணமாக உள்ளே மழை நீர் ஒழுகியது. இதனால் பயணிகள் இருக்கையில் அமர முடியாமல் கடும் அவதி அடைந்தனர்.

மழை நீர் ஒழுகியதால் பயணிகள் நின்றுகொண்டே பயணம் செய்துள்ளனர். இந்த காட்சிகளை செல்போனில் படம் பிடித்த பயணி ஒருவர் தனது எக்ஸ் தளத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரை டேக் செய்து பதிவிட்டார். அதில், ‘சென்னையில் இருந்து கரூருக்கு டிஎன்எஸ்இடிசி பஸ்சில் போகிறேன். பஸ் நல்ல நிலையில் இல்லை, மழைநீர் சீட்களில் ஒழுகுகிறது.

முறையாக பராமரிப்பு செய்யப்படவில்லை. போக்குவரத்து துறை அமைச்சர் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த எஸ்இடிசி, சிரமத்துக்கு வருந்துகிறோம். கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. இதையடுத்து அமைச்சர் உத்தரவின்படி உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி பஸ்சை முறையாக பராமரிக்காத கோவை கிளை உதவி பொறியாளர் விஜயன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Advertisement