தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் 3வது முறையாக இன்று டெல்லிக்கு புறப்பட்டார் கவர்னர் ஆர்.என்.ரவி

Advertisement

மீனம்பாக்கம்: கவர்னர் ஆர்.என்.ரவி, 3வது முறையாக, இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். கவர்னர் ஆர்.என்.ரவியின் பதவி காலம் கடந்த ஜூலை 31ம் தேதியுடன் நிறைவடைந்தது. அவரது பதவிக்காலம் நீடிக்கப்படவும் இல்லை, புதிய கவர்னர் நியமனம் செய்யப்படவும் இல்லை. அதனால் கவர்னராக ஆர் என் ரவி நீடித்து வருகிறார். இதற்கிடையே பதவி காலம் முடிந்த மறுநாள் (ஆகஸ்ட் 1ம் தேதி) காலை விமானத்தில் டெல்லிக்கு சென்றார். 4 நாட்கள் அங்கு தங்கியிருந்து விட்டு சென்னை திரும்பினார். ஆனாலும் கவர்னரின் பதவி நீடிப்பு குறித்த எந்த உத்தரவும் டெல்லியில் இருந்து வரவில்லை.

அதற்கு பிறகு கடந்த 19ம் தேதி 2வது முறையாக, கவர்னர் டெல்லிக்கு சென்றார். 3 நாட்கள் இருந்து விட்டு சென்னைக்கு திரும்பினார். இந்நிலையில் 3வது முறையாக கவர்னர் ரவி, இன்று காலை 6.40 மணிக்கு, விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டார். இம்முறை 2 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள கவர்னர், நாளை இரவு 8.20 மணிக்கு, விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், சென்னை திரும்புகிறார். பதவி நீடிப்பு உத்தரவை பெறுவதற்காக, தொடர்ச்சியாக 3 முறை கவர்னர் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

ஆனாலும் பதவி நீடிப்பு குறித்து டெல்லியில் இருந்து இதுவரையில் எந்தவிதமான தகவலும் வரவில்லை. இம்முறை பதவி நீடிப்பு உத்தரவு பெற்று கவர்னர் சென்னை திரும்புவார் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே மற்றொரு தகவலாக தமிழ்நாட்டிற்கு புதிய கவர்னரை நியமிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. எனவே புதிய கவர்னர் நியமிக்கப்படும் வரையில், ஆர்.என்.ரவி பதவியில் இருப்பார் என்று கூறப்படுகிறது.

Advertisement

Related News