அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட் படிப்பில் சேர விண்ணப்ப பதிவு
சென்னை: அமைச்சர் கோவி.செழியன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் எம்.எட். பாடப்பிரிவுகள் கொண்டுள்ள 6 அரசு கல்வியியல் கல்லூரிகளில் 300 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு 2025-26ம் கல்வியாண்டில் மாணாக்கர்கள் சேர்க்கை விண்ணப்பப்பதிவு நேற்று முதல் இணைய வழியில் தொடங்கியது. மாணாக்கர்கள் www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இணையதள முகவரியில் வரும் 20ம் தேதி வரை பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. பின்னர், இதற்கான தரவரிசைப் பட்டியல் வரும் 25ம் தேதி வெளியிடப்படும். மாணாக்கர் சேர்க்கை வரும் 26ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடைபெறும். மேலும், முதலாம் ஆண்டு வகுப்புகள் செப்.1ம் தேதி முதல் தொடங்கும்.