தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் படித்து முடித்த மாணவர்கள் 100% வேலைவாய்ப்பு பெற வேண்டும்: ஐடிஐ முதல்வர்களுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் உத்தரவு

Advertisement

சென்னை: அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) படித்து முடித்த மாணவர்களுக்கு 100% வேலைவாய்ப்பு பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அமைச்சர் சி.வி.கணேசன் கேட்டுக் கொண்டார். அனைத்து அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்களுடனான ஆய்வு கூட்டம் கிண்டியில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் தலைமை அலுவலகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் நடைபெற்றது.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி நிறைவு செய்த மாணவர்களில் 90% பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. தற்போது 100% வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என அனைத்து அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்களிடமும் அமைச்சர் சி.வி.கணேசன் கேட்டுக்கொண்டார். இந்த கூட்டத்தில், அரசு பணியில் இருக்கும்போது இயற்கை எய்திய அலுவலர்களின் வாரிசுதாரர்கள் 4 பேருக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை அமைச்சர் வழங்கினார்.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்று வரும் பயிற்சியாளர்களுக்கு ஒன்றிய அரசால் நடத்தப்பட்ட அகில இந்திய தொழிற்தேர்வில், கடந்த 2023 மற்றும் 2024ம் ஆண்டுகளில் 100% தேர்ச்சி பெற்ற அரசு தொழிற்பயிற்சி நிலையங்களின் 26 முதல்வர்களை பாராட்டி அமைச்சர் சி.வி.கணேசன் விருதுகள் வழங்கினார்.

மேலும், சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 43 நிறுவனத்திரும், 950 வேலை நாடுநர்களும் கலந்து கொண்டனர். இதில் தேர்வானவர்களுக்கு அமைச்சர் பணிநியமன ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை செயலாளர் வீர ராகவ ராவ், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநர் விஷ்ணு சந்திரன் மற்றும் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News