தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்: ஆர்.கே.பேட்டை அருகே பரபரப்பு

Advertisement

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அருகே அரசு பள்ளியில் மதிய சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஒன்றியம், ஜிகுலூர் என்கிற ஸ்ரீவிலாசபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில், 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டன.

மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களில், 8 பேருக்கு வாந்தி, பேதி மற்றும் ஒருவர் மயக்கம் அடைந்தார். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு மாணவர்களின் பெற்றோர் பதறி அடித்துக்கொண்டு பள்ளிக்கு வந்தனர். தகவல் அறிந்ததும், அம்மையார்குப்பம் வட்டார அரசு மருத்துவமனை மருத்துவர் ஞானசேகர், வங்கனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் குழு மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வெங்கடேசன், சுகாதார ஆய்வாளர் சலீம்பாஷா ஆகியோர் பள்ளிக்கு சென்று அனைத்து மாணவர்களுக்கும் பரிசோதனை, முதலுதவி மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேலும், மாணவர்கள் அனைவரும் உப்புக்கரைசல் வழங்கப்பட்டன. தற்போது அனைத்து மாணவர்கள் நலமாக உள்ளனர். தொடர்ந்து மருத்துவ குழு பள்ளியில் இருந்த குடிநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. மதிய உணவு மீதம் இல்லாததால் உணவு பரிசோதனை செய்யப்படவில்லை. இதனால், மாணவர்களுக்கு எதனால் வயிற்று போக்கு ஏற்பட்டது என்பது குறித்து மருத்துவக்குழு ஆராய்ந்து வருகிறது. தகவலறிந்த வட்டார கல்வி அலுவலர்கள் பள்ளிக்கு வந்து சமையலர் மற்றும் தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News